ADDED : நவ 22, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வானுார் அடுத்த சிறுநாவூரை சேர்ந்தவர் திவிஷ்குமார், 26. இவர், ஜிப்மர் வளாகத்தில், கிரேன் பணி செய்யும் தனது தந்தையை பார்க்க சென்றார்.
அப்போது அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்தவர் ரவி, இங்கு ஏன், வந்தாய் எனக் கேட்டு, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து, ரவியை தேடி வருகின்றனர்.