/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் ராணுவ அதிகாரியிடம் ரூ.33.87 லட்சம் மோசடி செய்தவர் கைது
/
முன்னாள் ராணுவ அதிகாரியிடம் ரூ.33.87 லட்சம் மோசடி செய்தவர் கைது
முன்னாள் ராணுவ அதிகாரியிடம் ரூ.33.87 லட்சம் மோசடி செய்தவர் கைது
முன்னாள் ராணுவ அதிகாரியிடம் ரூ.33.87 லட்சம் மோசடி செய்தவர் கைது
ADDED : நவ 23, 2024 05:46 AM
புதுச்சேரி : புதுச்சேரி, வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திர பட்டேல், 73; முன்னாள் ராணுவ அதிகாரி.
இவரை அதேப் பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் அவரது மனைவி காயத்ரி, கடந்த 2020ம் ஆண்டு சந்தித்து, ஓய்வூதிய தொகையை தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், லாபம் கிடைக்கும் என கூறினர்.
இதைநம்பிய ராஜேந்திர பட்டேல், அவர்களிடம் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய பல தவணையாக ரூ. 33 லட்சத்து 87 ஆயிரம் வழங்கினார். இதையடுத்து, முருகன் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த அளித்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அவை அனைத்தும் போலி என தெரிய வந்தது.
இதுகுறித்து, ராஜேந்திர பட்டேல் அளித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, முருகனை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

