sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேன் திருடிய நபர் கைது

வேன் திருடிய நபர் கைது

வேன் திருடிய நபர் கைது


ADDED : ஜூன் 11, 2025 07:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2025 07:37 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்; காரைக்கால், சொக்கநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 35. இவர், தனியார் ஸ்டீல் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் சொந்தமாக மினி லோடு வேன் வைத்தும் தொழில் செய்து வருகிறார்.

வழக்கம் போல் கம்பெனி வாசல் முன், வாகனத்தை நிறுத்தி விட்டு நேற்று முன்தினம் ராஜேஷ்குமார் வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது, மினி லோடு வேன் காணவில்லை.

பின், அவரது வாகனத்தை பொறையார் சாலை வழியாக சென்ற நிலையில், அவரது உறவினர்கள் நிறுத்தி, டிரைவரிடம் விசாரித்தனர். அவர், முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், வாகனத்தையும், அதனை ஓட்டி வந்த டிரைவரையும் நகர காவல் நிலையத்தில் ஒப்படைந்தனர்.

போலீசார் விசாரணையில், வேனை ஓட்டி வந்த டிரைவர் செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரம், அம்பாள் நகரை சேர்ந்த சந்திரசேகர் மகன் அருண், 38, என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, லோடு வேனை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us