ADDED : மார் 16, 2025 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: வீட்டு படியில் தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அரியாங்குப்பம், டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி, 53; இவர் உடல்நிலை சரியில்லாததால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். கடந்த 5ம் தேதி வீட்டு படி கட்டில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.