/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசுக்கு டிமிக்கி கொடுக்க மாடியில் இருந்து குதித்தவர் பலி
/
போலீசுக்கு டிமிக்கி கொடுக்க மாடியில் இருந்து குதித்தவர் பலி
போலீசுக்கு டிமிக்கி கொடுக்க மாடியில் இருந்து குதித்தவர் பலி
போலீசுக்கு டிமிக்கி கொடுக்க மாடியில் இருந்து குதித்தவர் பலி
ADDED : அக் 16, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், வடக்கு பரவூரை சேர்ந்தவர் மனோஜ், 47; வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவரை, எர்ணாகுளம் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
மனோஜ், புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் பதுங்கியிருப்பது தெரிந்தது.
காரைக்காலுக்கு வந்த போலீசார், அக்., 15 இரவு, பிரெஞ்சு ஆசிரியர் வீதியில் உள்ள அப்பார்மென்ட் 2வது மாடி அறைக்கதவை தட்டினர்.
கதவை திறந்த மனோஜ், போலீசாரிடம் கத்தியை காட்டி மிரட்டியபடி வெளியே வந்தவர் தப்புவதற்காக, மாடியில் இருந்து குதித்ததில், உயிரிழந்தார்.