/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கல்லுாரி மாணவர்கள் தேசிய அளவில் சி.எம்.ஏ., தேர்வில் தேர்ச்சி
/
மணக்குள விநாயகர் கல்லுாரி மாணவர்கள் தேசிய அளவில் சி.எம்.ஏ., தேர்வில் தேர்ச்சி
மணக்குள விநாயகர் கல்லுாரி மாணவர்கள் தேசிய அளவில் சி.எம்.ஏ., தேர்வில் தேர்ச்சி
மணக்குள விநாயகர் கல்லுாரி மாணவர்கள் தேசிய அளவில் சி.எம்.ஏ., தேர்வில் தேர்ச்சி
ADDED : பிப் 19, 2026 05:20 AM

புதுச்சேரி: மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் தேசிய அளவில் நடந்த சி.எம்.ஏ., தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிகத் துறையில் சிறப்பு நிலை பிரிவுகளாக தொழில் முறை கணக்கியல் (பி.காம்., பி.ஏ.,), செலவு மற்றும் நிர்வாகக் கணக்கியல் (பி.காம் சி.எம்.ஏ) ஆகியன உள்ளன.
இந்நிலையில், தேசிய அளவில் நடந்த சி.எம்.ஏ., தேர்வில் மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் மாணவர்கள் 10 பேர் தேர்வு எழுதினர். அதில் குரூப் 1 மற்றும் குரூப் 2 நிலைகளில் 3 மாணவர்களும், குரூப் 1 நிலையில் 4 மாணவர்கள் என, மொத்தம் 7 பேர் தேர்ச்சி பெற்றனர்.
சி.எம்.ஏ., தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணைச்செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குநர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி, கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்து தெரிவித்தனர்.வணிகவியல் துறைத் தலைவர் ஜானகிராமன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

