ADDED : டிச 28, 2025 05:42 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானொலி நிலைய புதுச்சேரி நிகழ்ச்சி பிரிவுத் தலைவர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பிரதமர் நரேந்திரமோடி மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் வானொலி வழியாக உரையாடும் நிகழ்ச்சி இன்று (28ம் தேதி) காலை 11:00 மணிக்கு ஒலிப்பரப்பாகும். இதனைத் தொடர்ந்து, உடனடியாக மன் கீ பாத் நிகழ்ச்சியின் தமிழ் மொழிபெயர்ப்பு மனதின் குரல் ஒலிபரப்பாகும். மீண்டும் இரவு 8:00 மணிக்கு மறு ஒலிபரப்பாகும் என தெரிவித்துள்ளார்.
