ADDED : ஜன 17, 2026 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில், மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
நிகழ்ச்சியில் பண்டசோழநல்லுார், வடுக்குப்பம், கல்மண்டபம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியில் இருந்து நுாற்றுாக்கும் மேற்பட்ட பசு மாடுகள், காளை மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பலுான் கட்டி, கோவில் வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.
சுவாமிக்கு படையலிட்டு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் காளைகள், துள்ளி குதித்தவாறு ஓடின. பின் மாட்டு வண்டியில் சிறுவர், சிறுமியர் அமர்ந்து பொங்கலோ பொங்கல் என சத்தமிட்டபடி மாட்டுப்பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

