ADDED : பிப் 24, 2026 04:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி வேளாண் துறை சார்பில் மண்வளம் திட்டம் குறித்த பள்ளி வழிகாட்டுதல் பயிற்சி முகாம் காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, காலாப்பட்டு வேளாண் அலுவலர் கோகுலலட்சுமி தலைமை தாங்கினார். துணை வேளாண் இயக்குநர் ஆல்பர்ட் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக வேளாண் அலுவலர் புவனேஸ்வரி, மண்வள நிபுணர்கள் பிரபு ,ஆதித்தியன் ஆகியோர் கலந்து கொண்டு மண்வளம் குறித்து பள்ளி மாணவியர்களுக்கு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை களப் பணி யாளர் இளங்கோவன், அலு வலக உதவியாளர் மாதவன் ஆகியோர் செய்திருந்தனர்.

