sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடலுார் கப்பல் ஊழியர் புதுச்சேரியில் தற்கொலை

/

கடலுார் கப்பல் ஊழியர் புதுச்சேரியில் தற்கொலை

கடலுார் கப்பல் ஊழியர் புதுச்சேரியில் தற்கொலை

கடலுார் கப்பல் ஊழியர் புதுச்சேரியில் தற்கொலை


ADDED : செப் 19, 2024 01:06 AM

Google News

ADDED : செப் 19, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வேலைக்கு செல்ல முடியாத விரக்தியில் கப்பல் ஊழியர் மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலுாரைச் சேர்ந்தவர் பிரபாகரன், 38; கப்பல் ஊழியர். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 3 வயது மகள் உள்ளார். கடலுாரில் உறவினர் வீட்டு வரதட்சணை பிரச்னையால், பிரபாகரன் மீது வழக்கு உள்ளது.

இதனால் கடந்த ஓராண்டாக கப்பல் பணிக்கு செல்ல முடியாமல், புதுச்சேரி கிருஷ்ணா நகர் 12வது குறுக்கு தெருவில் உள்ள உறவினர் வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். பிரபாகரன் வேலைக்கு செல்ல முடியாததால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் குருசுக்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு மனைவி சரண்யா தனது மகளுடன் சென்று விட்டார். நேற்று காலை பிரபாகரனுக்கு சரண்யா போன் செய்தபோது அவர் எடுக்கவில்லை. உடனடியாக கிருஷ்ணா நகர் வீட்டிற்கு வந்து கதவை தட்டினார். திறக்காததால், உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பிரபாகரன் மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து பிரபாகரன் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர். லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us