ADDED : ஜன 30, 2025 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அரும்பார்த்தபுரம், திரு.வி.க., அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் வாசு தலைமை தாங்கி, பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். ஆசிரியர் சுரேஷ், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் ஆறுமுகம், மாறன், ராஜகுமாரி, தனலட்சுமி, வாசுகி ஆகியோர் மாணவிகளை வாழ்த்தி பேசினர்.
பயிற்சியாளர் கஜலட்சுமி வழிகாட்டுதலின்படி, பயிற்சி பெற்ற மாணவிகள் தற்காப்பு கலை சாகசங்களை செய்து காட்டினர். ஆசிரியை சுகிலீலா நன்றி கூறினார்.
ஆசிரியை அசுந்தா தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் அன்பழகன் செய்திருந்தார்.