sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சம்பத் எம்.எல்.ஏ.,விற்கு பொங்கல் பண்டிகை தெளிவை வழங்கட்டும்: ஜான்குமார்

/

சம்பத் எம்.எல்.ஏ.,விற்கு பொங்கல் பண்டிகை தெளிவை வழங்கட்டும்: ஜான்குமார்

சம்பத் எம்.எல்.ஏ.,விற்கு பொங்கல் பண்டிகை தெளிவை வழங்கட்டும்: ஜான்குமார்

சம்பத் எம்.எல்.ஏ.,விற்கு பொங்கல் பண்டிகை தெளிவை வழங்கட்டும்: ஜான்குமார்


ADDED : ஜன 11, 2025 06:54 AM

Google News

ADDED : ஜன 11, 2025 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வரும் பொங்கல் திருநாள் சம்பத் எம்.எல்.ஏ.,விற்கு அனைத்து தெளிவையும் வழங்கட்டும் என, ஜான்குமார் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

முதலியார்பேட்டை தி.மு.க., எம்.எல்.ஏ. என்னைப் பற்றி வசைமாறி பொழிந்துள்ளார். மக்கள் நீதி மய்ய கட்சி கொடி ஏற்றி, என்.ஆர். காங்., மற்றும் தி.மு.க.,விற்கு போகலாமா அல்லது சுயேச்சையாக நிற்கலாமா என யோசனை குளத்தில் நீந்தி கொண்டிருந்தவர், என்னை 'கட்சி மாறி' என்கிறார்.

நான் என்ன செய்தேன் என, தொகுதி மக்களைச் சந்தித்து கேட்டால் அவருக்கு தெரியும். அரிசி, பருப்பு கொடுத்து அரசியல் செய்வதாக ஒரு கொச்சை வாதத்தை முன்வைத்திருக்கிறார். அணையாத அடுப்பை ஏற்றி வைத்து வள்ளலார் உணவு வழங்கினார்.

'உணவு கிடைக்காத பிள்ளைகள் எப்படி படிக்க வருவார்கள்' என்று நினைத்த முன்னாள் முதல்வர்காமராஜர் மதிய உணவு திட்டம் கொண்டு வந்தார். இவர்கள் அனைவரும், அரிசி, பருப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தனர். அவர்களைப் பின்பற்றி நானும் கொடுத்தேன்.

பா.ஜ.,வின் தீர்க்கதரிசி வாஜ்பாய் அரசுக்கு, அப்போது தி.மு.க., சித்தாந்த வேறுபாடுகளுடன் தான் ஆதரவு அளித்தது. கருணாநிதி - வாஜ்பாய் கூட்டணி, புதுச்சேரியிலும் வெற்றியை தந்தது. நான் முதலியார்பேட்டை தொகுதியில் நிற்க போவதாக சொல்கிறார். அது நடந்தால் நல்லது தான்.

பயம் வந்தால் மனசு குழம்பும். அறிவு தெளிவு இழக்கும். அவருக்கும் அது தான் நடந்திருக்கிறது. வரும் பொங்கல் திருநாள் அவருக்கு அனைத்து தெளிவையும் வழங்கட்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us