ADDED : பிப் 17, 2026 05:40 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த செம்படப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் மாயானக்கொள்ளை விழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் ஆராதனைகளும், இரவு 7 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்து வருகிறது.
நேற்று இரவு 9 மணிக்கு வள்ளாள கண்டன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மதியம் 1.00 மணிக்கு மயானக் கொள்ளை விழாவும், நாளை காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.
