/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் கஞ்சா விற்ற மருத்துவ மாணவர் கைது
/
புதுச்சேரியில் கஞ்சா விற்ற மருத்துவ மாணவர் கைது
ADDED : ஜன 03, 2026 07:10 AM
புதுச்சேரி: புதுச்சேரி அருகே கஞ்சா விற்ற எம்.பி.பி.எஸ்., மாணவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, ஆர்.கே.நகர், வாலிபால் மைதானம் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அரியாங்குப்பம் போலீசார் அங்கு சென்றனர்.
போலீசாரை கண்டதும், அங்கு நின்றிருந்த வாலிபர், 'ராயல் என்பீல்டு' புல்லட்டில் தப்பி செல்ல முயன்றார்.
அவரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்ததில், 1,460 கிராம் கஞ்சா வைத்திருந்தார்.
விசாரணையில், அவர், டில்லியை சேர்ந்த விகாஸ் விஜ் மகன் லக் ஷ்யவிஜ், 21, என்பதும், தற்போது தவளக்குப்பம், சப்தகிரி நகரில் தங்கி, கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., மூன்றாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது.
கஞ்சா வாங்கி புகைத்து வந்தவர், பின்னர் அவரே அசாம் மாநிலத்தில் இருந்து கஞ்சாவை, அஞ்சல் துறை பார்சலில் புதுச்சேரியில் தான் தங்கியிருக்கும் வீட்டு முகவரிக்கு வரவழைத்து, அரியாங்குப்பம் அஞ்சல் அலுவலகத்தில் நேரில் சென்று வாங்கி, கஞ்சாவை சிறு வியாபாரிகளுக்கு விற்று வந்தார்.
நேற்று முன்தினம் புத் தாண்டு கொண்டாட்டத்திற் காக வியாபாரிகளுக்கு கஞ்சா விற்க காத்திருந்த போது, போலீசில் சிக்கி உள்ளார். அவர் விற்பனைக்கு வைத்திருந்த, 2.26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1,460 கிராம் கஞ்சா மற்றும் புல்லட் பறிமுதல் செய்யப்பட்டது.

