/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வரை சந்தித்து எம்.எல்.ஏ., கோரிக்கை
/
முதல்வரை சந்தித்து எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : நவ 13, 2024 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி சாலையோர மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வழங்ககோரி நேரு எம்.எல்.ஏ., முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
சட்டசபை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்த, நேரு எம்.எல்.ஏ., புதுச்சேரி ரெட்டியார்பாளையம், லேம்பர்ட் சரவணன் நகரில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளது.
எனவே, அப்பகுதியில் புதுச்சேரி நகரப்பகுதி சாலையோரம் வசித்து வரும் வீடாற்ற ஏழை மக்களுக்கு குடியிருப்புகளை வழங்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.