sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பை,ஷூ விரைவில் வழங்கப்படும் அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

/

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பை,ஷூ விரைவில் வழங்கப்படும் அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பை,ஷூ விரைவில் வழங்கப்படும் அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பை,ஷூ விரைவில் வழங்கப்படும் அமைச்சர் நமச்சிவாயம் தகவல்


ADDED : ஜூன் 12, 2025 07:18 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 07:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்,: அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில், புத்தகப்பை, ஷூ வழங்கப்படும் என, அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

மண்ணாடிப்பட்டு தொகுதி, சந்தை புதுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று, 20 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கி பேசுகையில், இப்பள்ளி தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவதற்கு, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அனைத்து மாணவர்களுக்கும் விரைவாக அரசின் சார்பில் புத்தகப்பை வழங்கப்படயுள்ளது. மேலும், அனைவருக்கும் ஷூ வழங்க நடவடிக்கை எடுத்து டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதுவும் விரைவாக வழங்கப்படும்.

அரசு பள்ளி மாணவர்கள் சராளமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கான நிலையை உருவாக்கவும், ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்கும் தனியாக கல்வித்துறை மூலமாக புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு, விரைவில் முதல்வரால் வெளியிடப்படயுள்ளது.

அதற்கான நடவடிக்கையை கல்வித்துறை வேகமாக எடுத்து வருகிறது' என்றார்.

விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., பிரமுகர் முத்தழகன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, முதன்மை கல்வி அதிகாரி குலசேரகன், தலைமை ஆசிரியர் ஷியமளா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us