sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இலவச மனைப்பட்டா வழங்க அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு

/

இலவச மனைப்பட்டா வழங்க அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு

இலவச மனைப்பட்டா வழங்க அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு

இலவச மனைப்பட்டா வழங்க அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு


ADDED : நவ 22, 2024 05:38 AM

Google News

ADDED : நவ 22, 2024 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: சந்தை புதுக்குப்பம், தேத்தாம்பாக்கத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

மண்ணாடிப்பட்டு தொகுதி, சந்தை புதுக்குப்பம், தேத்தாம்பாக்கம் கிராம ஆதிதிராவிடர் மக்கள் இலவச மனைப்பட்டா வழங்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அக்கிராமங்களில் இலவச மனைப்பட்டா வழங்குவதற்கான இடங்களை தேர்வு செய்ய அமைச்சர் நமச்சிவாயம் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். பின், பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, தேத்தாம்பாக்கத்தில் சேதமடைந்துள்ள அரசு பள்ளி கட்டடத்தை பார்வையிட்ட அவர், அதனை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், வில்லியனுார் சப் கலெக்டர் சோமசேகர அப்பராவ் கொட்டாரு, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us