
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நேரு எம்.எல்.ஏ., செயற்பொறியாளர் சீனுவாசனுடன் ஆலோசனை நடத்தினார்.
அதில், உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்டபுதுதெரு, காமராஜர் வீதி, சுப்ரமணிய சிவா வீதி, அந்தோனியார் கோவில்வீதி, புதுநகர், கென்னடி நகர் பிரதான சாலை, சாந்தி நகர் தெய்வ சிகாமணி வீதி, நெல்லித்தோப்பு கண்ணார வீதி, தச்சர் வீதி ஆகிய பகுதிகளில் புதிதாக சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

