வாய்க்கால் துார் வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
வாய்க்கால் துார் வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : செப் 18, 2026 08:03 PM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: ஊசுடு தொகுதி பொறையூர் அகரம் பஞ்சாத்தில் துார்வாரும் பணியை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலம் சார்பில், மத்திய அரசு, விக்சித் பாரத் கிராமின் வேலைவாய்ப்பு மற்றும் ஆஜீவிகா இயக்கதிற்கான உத்தராவதம் திட்டத்தின் கீழ், ஊசுடு தொகுதி பொறையூர் அகரம் பஞ்சாத்தை சேர்ந்த சேந்தநத்தம், உளவாய்க்கால், அகரம் மற்றும் கோனேரிக்குப்பம் ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் பள்ள வாய்க்கால் துார்வாரும் பணியை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், கிராம முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
