/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போர்வல் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
போர்வல் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
போர்வல் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
போர்வல் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜன 11, 2026 05:17 AM

வில்லியனுார்: பத்துகண்ணு பகுதியில் புதிய போர்வல் அமைக்கும் பணியை எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். கூடப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள புதிய நகர் பகுதி மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் குடிநீர் பிரிவு சார்பில் ரூ. 12 லட்சம் மதிப்பில் பத்துகண்ணில் புதிய போர்வல் அமைக்கும் பணியை சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, பொதுசுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் பக்தவத்சலம், உதவிப்பொறியாளர் பீனாராணி, இளநிலைப் பொறியாளர் திருவேங்கடம் மற்றும் பா.ஜ நிர்வாகிகள் தியாகராஜன், ஐய்யனார், முத்தாலுமுரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

