sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இலவச மனைப்பட்டா வழங்க கோரி இயக்குனரிடம் எம்.எல்.ஏ., மனு

/

இலவச மனைப்பட்டா வழங்க கோரி இயக்குனரிடம் எம்.எல்.ஏ., மனு

இலவச மனைப்பட்டா வழங்க கோரி இயக்குனரிடம் எம்.எல்.ஏ., மனு

இலவச மனைப்பட்டா வழங்க கோரி இயக்குனரிடம் எம்.எல்.ஏ., மனு


ADDED : மே 31, 2025 01:45 AM

Google News

ADDED : மே 31, 2025 01:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : உப்பளம் தொகுதியில் ஏழை மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் திட்டம் தொடர்பாக ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவனை சந்தித்து, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மனு அளித்தார்.

உப்பளம் தொகுதி ஆட்டுப்பட்டி, நேதாஜி நகர் 2 , வெங்காயத்தோப்பு, ரோடியர்பேட் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள் மற்றும் பின்தங்கிய மக்களுக்கு இலவச மனைப்பட்டா அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டம் தொடர்பாக உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி, முதல்வர், துறை அமைச்சர்களை சந்தித்து பேசி வலியுறுத்தி, ஏழை மக்களுக்கு நில உரிமை மனை பட்டா பெற்றுத் தருவதற்கு அரசு உறுதி அளித்துள்ளது.

அதையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை, சிறப்புக் கூறு நிதியின் கீழ் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் துவக்கியுள்ளது. இந்நிலையில், நலத்துறை இயக்குனர் இளங்கோவனை அவரது அலுவலகத்தில் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ., சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., நில உரிமையாளர்களை நேரடியாக இயக்குனர் முன்னிலையில் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அரசு நிலை மதிப்பில் இடங்களை ஒப்படைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்தார்.

தொகுதி துணை செயலாளர் நிசார், கிளை செயலாளர் காலப்பன், இருதயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us