sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நகராட்சி மேரி ஹாலில் திருமண பதிவு சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்

/

நகராட்சி மேரி ஹாலில் திருமண பதிவு சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்

நகராட்சி மேரி ஹாலில் திருமண பதிவு சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்

நகராட்சி மேரி ஹாலில் திருமண பதிவு சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்


ADDED : மார் 21, 2025 05:47 AM

Google News

ADDED : மார் 21, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்;

பி.ஆர்.சிவா (சுயேச்சை): புதுச்சேரி நகராட்சிக்கு சொந்தமான கடற்கரையில் உள்ள மேரி ஹால்முன்பு திருமண வரவேற்பு நடந்து வந்தது. இப்போது அனுமதி வழங்கப்படுகின்றதா.

முதல்வர் ரங்கசாமி: தற்போது பிரெஞ்சு குடியுரிமை சட்டத்தின்படி புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மணமகன் அல்லது மணமகள் பிரெஞ்சு குடியுரிமை பெற்றிருந்தால் அவர்கள் திருமணத்தை பதிவு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

பி.ஆர்.சிவா: இந்த அனுமதிக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

முதல்வர் ரங்கசாமி: பிரெஞ்சு திருமண பதிவு அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு கட்டணமாக ரூ. 50,500 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மற்றவர்கள் திருமண வரவேற்பு நடத்துவதற்கு விண்ணப்பித்தால் பரிசீலனை செய்து அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நேரு(சுயேச்சை): புதுச்சேரி மேரி ஹாலில் காலம் காலமாக திருமணங்கள் நடந்து வந்துள்ளன. பதிவு செய்யப்பட்டன. எனவே அங்குபிரெஞ்சு திருமணம் மட்டுமின்றி மற்றவர்களையும் அனுமதிக்க வேண்டும். பத்திரப்பதிவு துறையில் தற்போது திருமணம் நடந்தாலும் அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை.

நாஜிம் (தி.மு.க): காலம் காலமாக திருமண பதிவுகள் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் நடந்து வந்துள்ளது.

மேரி ஹாலில் திருமணம் செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த நடைமுறையை ஏன் மாற்றினர் என்று தெரியவில்லை.

முதல்வர் ரங்கசாமி: எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கை தொடர்பாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.






      Dinamalar
      Follow us