sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகையில் முறைகேடு கவர்னரிடம் எம்.எல்.ஏ., மனு

/

பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகையில் முறைகேடு கவர்னரிடம் எம்.எல்.ஏ., மனு

பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகையில் முறைகேடு கவர்னரிடம் எம்.எல்.ஏ., மனு

பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகையில் முறைகேடு கவர்னரிடம் எம்.எல்.ஏ., மனு


ADDED : செப் 25, 2024 04:09 AM

Google News

ADDED : செப் 25, 2024 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு, அரசு நிர்ணயித்த உதவித் தொகையை கல்லுாரி நிர்வாகங்கள் வழங்க வேண்டி, கவர்னரி டம், அங்காளன் எம்.எல்.ஏ., மனு அளித்துள்ளார்.

மனு விபரம்:

தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் முதுநிலை மருத்துவ கவுன்சிலின் உத்தரவுப்படி, மத்திய அரசு மாதாந்திர உதவித்தொகையாக, இளங்கலை மருத்துவ பயிற்சியாளர்களுக்கு, ரூ.20 ஆயிரம், முதுகலை மருத்துவ பயிற்சியாளர்களுக்கு, ரூ.43 ஆயிரமும் வழங்க, புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை இயக்குனரகம் அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆனால், மருத்துவக்கல்லுாரிகள் இந்த உத்தரவை பின்பற்றாமல், ஜூனியர் மருத்துவ பயிற்சியாளர்களுக்கு, ரூ.10 ஆயிரமும், முதுகலை பயிற்சியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் என, நேரடி நிதி பரிமாற்ற முறையை தவிர்த்து, மோசடி 'வவுச்சர்'களில், கையெழுத்திட, மாணவர்களை கட்டாயப்படுத்துகிறது.

அரசு நிர்ணயித்த உதவித் தொகையை, மாணவர்களுக்கு கல்லுாரி நிர்வாகங்கள் வழங்க, கண்காணிப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us