ADDED : ஆக 28, 2026 09:13 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: மருத்துவமனையில் மொபைல் போனை திருடிய கோவையை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் கடந்த 26ம் தேதி செவிலியர் ராஜேஸ்வரி பணியில் இருந்தார். செவிலியர் அறையில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் செவிலியரின் மொபைல் போனை திருடிச் சென்றார். அதன் மதிப்பு 15 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இதுகுறித்து, ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில், காரைக்கால் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மொபைல் போனை திருடியது கோயம்புத்துார் மாவட்டம், காந்திபுரம் பகுதியை சேர்ந்த பேச்சியப்பன்,39, என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
