/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மடுகரை மரக்காளீஸ்வரர் கோவிலில் சோமவார நிகழ்ச்சி
/
மடுகரை மரக்காளீஸ்வரர் கோவிலில் சோமவார நிகழ்ச்சி
ADDED : பிப் 27, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : மடுகரை மரக்காளீஸ்வரர் கோவிலில் சோமவார நிகழ்ச்சி நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை கிராமத்தில் உள்ள மரகதவல்லி உடனுறை மரக்காளீஸ்வர் கோவிலில், நேற்று சோமவார நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி காலை 10.00 மணிக்கு மரக்காளீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் நடந்தது.
மாலை 6.00 மணிக்கு சோமவார சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் மடுகரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

