ADDED : பிப் 06, 2024 04:11 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம் : மடுகரை மரக்காளீஸ்வரர் கோவிலில் சோமவாரம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலை மரக்காளீஸ்வரருக்கு சிறப்பு அபி ேஷகம், ஆராதனைகள் நடந்தது. மாலை சோமவாரம் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் மடுகரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
