ADDED : அக் 14, 2024 04:01 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி, : மொபட் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த சேதராப்பட்டு புதிய காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரி, 32. இவர் கடந்த 3ம் தேதி வீட்டு வெளியே தனது மொபட்டை நிறுத்தினார். மறுநாள் காலையில் பார்த்தபோது, காணவில்லை.
இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, மொபட் திருடிய நபரை தேடி வருகின்றனர்.
