sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பைக் மீது கார் மோதி விபத்து காயமடைந்த தாய், மகன் சாவு

/

பைக் மீது கார் மோதி விபத்து காயமடைந்த தாய், மகன் சாவு

பைக் மீது கார் மோதி விபத்து காயமடைந்த தாய், மகன் சாவு

பைக் மீது கார் மோதி விபத்து காயமடைந்த தாய், மகன் சாவு


ADDED : ஆக 28, 2025 02:47 AM

Google News

ADDED : ஆக 28, 2025 02:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: பகண்டைகூட்ரோட்டில், பைக் மீது கார் மோதிய விபத்தில் தந்தை உயிரிழந்த நிலையில், காயமடைந்த தாய், மகனும் மருத்துவமனையில் இறந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த மாடாம்பூண்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் நாராயணன், 22; இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. வரும் செப்., 4ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடப்பதையொட்டி, நேற்று முன்தினம், தந்தை ஆறுமுகம், 45; தாய் சென்னியம்மாள், 42; ஆகியோருடன் பைக்கில் சென்று உறவினர்களுக்கு பத்திரிக்கை வைத்தார்.அன்றைய தினம் இரவு, ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் வீடு திரும்பினார். பகண்டைகூட்ரோடு அருகே சென்ற போது, எதிரே வந்த பிகோ போர்டு கார் (டிஎன்01- ஏக்யூ4305) மோதியது. விபத்தில் காயமடைந்த மூவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஆறுமுகம் இறந்தார்.

மற்ற இருவரும் சிகிச்சையில் இருந்த நிலையில், இரவு 8.30 மணியளவில் சென்னியம்மாள் உயிரிழந்தார். மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் நாராயணன் உயிரிழந்தார்.

விபத்தில் தந்தை, தாய், மகன் ஆகிய மூவரும் உயிரிழந்த சம்பவம் மாடம்பூண்டி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

விபத்து குறித்து பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us