/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தவளக்குப்பத்தில் தாய், மகன் மாயம்
/
தவளக்குப்பத்தில் தாய், மகன் மாயம்
ADDED : மார் 17, 2025 02:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: மூன்று வயது மகனுடன், தாய் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தவளக்குப்பம் தாமரை குளத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி சவிதா, 40.
இவர், கடந்த 2ம் தேதி கணவரிடம் கோபித்து கொண்டு, தனது 3 வயது மகன் திவ்யதருணுடன் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.