ADDED : அக் 22, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி,: கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற தாயை காணவில்லை என, போலீசில் மகள் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி, ரெயின்போ நகரை சேர்ந்தவர் லட்சுமி. ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட அவர் அடிக்கடி கோவிலுக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த மே மாதம் 3ம் தேதி மயிலம் முருகன் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற லட்சமியை காணவில்லை.
இதுகுறித்து அவரது மகள் செல்வி, 45 அளித்த புகாரில் பெரியகடை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

