ADDED : டிச 26, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: நைனார்மண்டபத்தில் தனது மகளை காணவில்லை என, தாய் முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.
நைனார்மண்டபம், மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மகள் ஜெஸ்மிதா, 15. இவர் மூலக்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வீட்டில் தனியாக இருந்த அவர், திடீரென காணாமல் போனார். அவரை பெற்றோர், உறவினர் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் தேடியும், கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது தாய், பிரியா முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, காணாமல் போன ஜெஸ்மிதாவை தேடி வருகின்றனர்.

