sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தாய் மாயம் மகன் புகார்

/

தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்


ADDED : ஏப் 15, 2025 04:27 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: மனைவியை பிரிந்து வசித்து வரும் மகனின் வாழ்க்கை நினைத்து மன வேதனையில் இருந்து வந்த தாய் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகூர் அடுத்துள்ள கடுவனுாரை சேர்ந்தவர் நாகராஜன் 64; பார்வை திறன் இழந்தவர். இவருக்கு, புஷ்பா 53; என்ற மனைவியும், ஜானகிராமன், ராம்குமார் என்ற மகன்களும் உள்ளனர். ராம்குமார் சென்னையில் வேலை செய்து வருகிறார். ஜானகிராமனுக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, கணவன் -மனைவி இருவரும் பிரிந்து தனித்தனியே வசித்து வருகின்றனர்.

இதை நினைத்து, புஷ்பா மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி காலை புஷ்பா, தனது கணவர் மற்றும் மகனிடம் இது பற்றி வருதத்துடன் பேசியுள்ளார். அவர்கள் இருவரும், அவரை சமாதானம் செய்து வைத்தனர்.

பின்னர், வீட்டில் இருந்து வெளியே சென்ற புஷ்பா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us