/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏலச்சீட்டு நடத்தி ரூ. 32 லட்சம் மோசடி; தாய், மகள் மீது வழக்கு
/
ஏலச்சீட்டு நடத்தி ரூ. 32 லட்சம் மோசடி; தாய், மகள் மீது வழக்கு
ஏலச்சீட்டு நடத்தி ரூ. 32 லட்சம் மோசடி; தாய், மகள் மீது வழக்கு
ஏலச்சீட்டு நடத்தி ரூ. 32 லட்சம் மோசடி; தாய், மகள் மீது வழக்கு
ADDED : ஏப் 28, 2025 04:28 AM
புதுச்சேரி: அய்யங்குட்டிப்பாளையத்தில் ஏலச்சீட்டு பிடித்து பலரிடம் ரூ.32 லட்சம் மோசடி செய்த தாய், மகள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
அய்யங்குட்டிப்பாளையம், சிவசக்தி நகரை சேர்ந்தவர் செல்வி (எ) ஆச்சி; பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவர், தனது மகள் ராமலட்சுமியுடன் இணைந்து, அப்பகுதியில் 1 லட்சம், 1.50 லட்சம் என, மாத ஏலச்சீட்டு பிடித்து வந்தார்.
இவர்களிடம் தர்மபுரி, கல்கி நகரை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் சங்கர், 41; என்பவர் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தார். கடந்த மார்ச் 21ம் தேதி செல்வி மற்றும் அவரது மகள் ஏலச்சீட்டு பணத்துடன் மாயமாகினர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சங்கர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதில், மாயமான செல்வி, ஏலச்சீட்டு பிடித்து தன்னிடம் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஏமாற்றியுள்ளார்.
மேலும், அப்பகுதியில் பலரிடம் இருந்து 32 லட்சம் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்பேரில், செல்வி மற்றும் ராமலட்சுமி மீது மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.