ADDED : டிச 11, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : மகன் திட்டியதால் காணாமல் போன தாயை போலீசார் தேடிவருகின்றனர்.
காரைக்கால், கைலாசநாதர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி மனைவி அம்சா,52; இவர், தனது மகன் காளிசரணுடன் வசித்து வருகிறார். இவர், கடந்த 8 ம் தேதி வீட்டை சுத்தம் செய்த போது, தண்ணீர் அதிகம் ஊற்றியதை, மகன் காளிசரண் திட்டினார். அதில் மனமுடைந்த அம்சா நேற்று முன்தினம் தான் அணிந்திருந்த தாலி செயின், தோடு, கொலுசு உள்ளிட்ட பொருட்களை கழற்றி, டிவி அருகில் வைத்துவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து காளிசரண் அளித்த புகாரின் பேரில் காரைக்கால் போலீசார் வழக்கு பதிந்து அம்சாவை விசாரித்து வருகின்றனர்.