/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாய்க்கு மிரட்டல் மகன் மீது வழக்கு
/
தாய்க்கு மிரட்டல் மகன் மீது வழக்கு
ADDED : பிப் 18, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
நெட்டப்பாக்கம் அடுத்த வடுவகுப்பம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரோஜா, 70.இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவரது கணவர் மூன்று மாதங்களுக்கு முன், இறந்து விட்டார். சரோஜா தனியாக வசித்து வருகிறார்.சரோஜாவின் மூன்றாவது மகன் சதீஷ்குமார்,37. இவர், தாய் சரோஜாவை தகாத வார்த்தைகளால் திட்டி,கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சரோஜா புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் சதீஷ்குமார் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

