ADDED : மே 29, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்:காரைக்காலில் தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகள் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால், ஜீவா நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி ஸ்ரீதளாதேவி. இவரது மகள் ஜெஸ்மின் பிரியா, 17. இவர் அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.ஏ., படித்து வருகிறார். இவர், தினமும் மொபைல் போனில் பேசுவது வழக்கம். இதை நேற்று முன்தினம் ஸ்ரீதளாதேவி கண்டித்தார்.
இதனால் முனமுடைந்த ஜெஸ்மின் பிரியா வீட்டு ஜன்னல் கம்பியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.