ADDED : நவ 22, 2024 05:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பைக் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
பெரியகடை போலீசார் நேற்று முன்தினம் இரவு வெங்கடா நகர் 45 அடி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக பைக்கில் அதிவேகமாக வந்த நபரை நிறுத்தி, விசாரித்தனர். அவர் ஓட்டி வந்தது திருட்டு பைக் என, தெரியவந்தது.
விசாரணையில் கடலுார், குள்ளஞ்சாவடியை சேர்ந்த ராமலிங்கம், 54; என்பதும், தற்போது புதுச்சேரி அண்ணா நகரில் வாடகை வீட்டில் வசித்து வருவதும், சமீபத்தில் காமராஜ் சாலை, கோவிந்த சாலை பகுதிகளில் இரண்டு பைக்குகளை திருடியதும் தெரியவந்தது.
ராமலிங்கத்தை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து இரண்டு பைக்குளை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.