/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலாளர்களுக்கு தள்ளுவண்டி செல்வகணபதி எம்.பி., வழங்கினார்
/
தொழிலாளர்களுக்கு தள்ளுவண்டி செல்வகணபதி எம்.பி., வழங்கினார்
தொழிலாளர்களுக்கு தள்ளுவண்டி செல்வகணபதி எம்.பி., வழங்கினார்
தொழிலாளர்களுக்கு தள்ளுவண்டி செல்வகணபதி எம்.பி., வழங்கினார்
ADDED : மே 01, 2025 04:47 AM

புதுச்சேரி: சலவை தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், சலவை தொழிலாளர்களுக்கு நடமாடும் தள்ளுவண்டி, அயன் பாக்ஸ் வழங்கும் விழா, இ.சி.ஆரில் உள்ள எம்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
துறை இயக்குநர் ராகினி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செல்வகணபதி எம்.பி., பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.
விழாவில், மொத்தம் 16 சலவை தொழிலாளர்களுக்கு தள்ளுவண்டி, அயன்பாக்ஸ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை அதிகாரிகள், சலவையாளர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

