sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மும்பை சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு; பெங்களூருவில் பதுங்கியிருந்தவர் கைது

/

மும்பை சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு; பெங்களூருவில் பதுங்கியிருந்தவர் கைது

மும்பை சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு; பெங்களூருவில் பதுங்கியிருந்தவர் கைது

மும்பை சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு; பெங்களூருவில் பதுங்கியிருந்தவர் கைது


ADDED : நவ 06, 2024 08:29 AM

Google News

ADDED : நவ 06, 2024 08:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மும்பை சிறுமி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் பெங்களூருவில் பதுங்கி இருந்த வாலிபரை போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.

மும்பையை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி தனது தாய் தந்தையுடன், கடந்த வாரம் புதுச்சேரி வந்தார். கடந்த 30 ம் தேதி வீட்டில் இருந்து வெளியே வந்தவரை காணவில்லை. இதுகுறித்து, 31ம் தேதி இரவு பெரியக்கடை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கடத்தல் வழக்கு பதிந்து தேடி வந்தனர்.

1ம் தேதி மாலை கடற்கரையில் சிறுமி மீட்கப்பட்டார். அந்த சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.

போலீஸ் விசாரணையில், சிறுமியை கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த காஜாமொய்தீன், 34; ஆட்டோவில் ஏற்றிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து மீண்டும் புதுச்சேரியில் விட்டு சென்றுள்ளார்.

அதன்பின்பு புதுச்சேரி வந்த சென்னையை சேர்ந்த 4 பேர் கொண்ட சுற்றுலா பயணிகள் சிறுமியிடம் பேச்சு கொடுத்து தங்களின் காரில் கடத்தி சென்று சென்னையில் வைத்து, பாலியல் பலாத்காரம் செய்ததுள்ளனர். பின்பு சிறுமியை வாடகை டாக்கி மூலம் புதுச்சேரி அனுப்பி வைத்தது தெரியவந்தது.

பெரியக்கடை போலீசார் போக்சோ மற்றும் கடத்தல் வழக்கு பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் கோட்டக்குப்பம் காஜா மொய்தீன், 34; என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னையைச் சேர்ந்த 3 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். ஆனால் இரவு வரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படாமல் போலீஸ் விசாரணையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், 4 பேர் கும்பலில் தப்பித்து பெங்களூரில் பதுங்கி இருந்த நபரை, கிழக்கு கிரைம் போலீசார் கைது செய்து நேற்று புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் கூறுகையில்; கைதானவர்கள் யார் யார் என்ற விபரங்கள் சிறைக்கு அனுப்பிய பிறகே தெரிவிக்கப்படும் என, கூறினார்.






      Dinamalar
      Follow us