புதுச்சேரி: புயல் பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு வழங்க கோரி மா.கம்யூ., கட்சி சார்பில் ஊர்வலம் நடந்தது.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரியை பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும், மாநில அரசு கோரிய நிதி வழங்க வேண்டும், மக்களின் இழப்பீட்டிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி சாரம் ஜீவா சிலை அருகே மா.கம்யூ., கட்சியினர் திரண்டனர். மாநில செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது. வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே போலீசார் தடுப்புகளை வைத்து ஊர்வலத்தை தடுத்தனர். அங்கு, போலீசாரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி நிர்வாகிகள் ராஜாங்கம், முருகன், பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மா.கம்யூ., கட்சியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.