sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

'சில்மிஷ' தம்பி கொலை; அண்ணன் வெறிச்செயல்

/

'சில்மிஷ' தம்பி கொலை; அண்ணன் வெறிச்செயல்

'சில்மிஷ' தம்பி கொலை; அண்ணன் வெறிச்செயல்

'சில்மிஷ' தம்பி கொலை; அண்ணன் வெறிச்செயல்


ADDED : ஜூலை 04, 2025 07:18 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 07:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்; மனைவியுடன் பழகியதால், தம்பியை சரமாரியாக வெட்டி கொலை செய்த அண்ணன் உள்ளிட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, காரைக்கால், கோவில்பத்து ஒமக்குளம் நரிக்குறவர் தெருவைச் சேர்ந்தவர் ரஜினி, 45; இவரது மகன் ராகுல், 23; தாய் உஷாவுடன் காரைக்கால் பீச்சில் பொம்மை வியாபாரம் செய்து வந்தார்.

இவருக்கு, புதுச்சேரி, வில்லியனுார் அருகே ஒதியம்பட்டில் உள்ள பெரியம்மா மகன் கவுதம் என்பவரின் மனைவி சாரதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த கவுதம், தம்பி முறையான ராகுலை கண்டித்தார். ஆனாலும், பழக்கத்தை ராகுல் தொடர்ந்துள்ளார்.

ஆத்திரமடைந்த கவுதம், ராகுலை கொல்ல திட்டமிட்டார். நேற்று அதிகாலை, 2:30 மணி அளவில், வீட்டின் பின்பக்கம் கட்டிலில் துாங்கிய ராகுலை, சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு கவுதம் உட்பட இருவர் தப்பினர்.

ரஜினி புகாரில், காரைக்கால் போலீசார் வழக்கு பதிந்து கவுதம் உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us