/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாச்சியார் அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
/
நாச்சியார் அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : பிப் 24, 2026 04:26 AM
நெட்டப்பாக்கம்: சின்ன கரையாம்புத்துார் நாச்சியார் அம்மன் கோவில் கும்பாபி ேஷக விழா நடந்தது.
நெட்டப்பாக்கம் தொகுதி, சின்ன கரையாம்புத்துார் கிராமத்தில் அமைந்துள்ள நாச்சியார் அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷக விழா கடந்த 20ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. வரும் 21ம் தேதி காலை 9 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜை, சோமகும்ப பூஜை, துவார பூஜை, பாவனா அபிேஷகம், வேதிக பூஜை, மாலை 5.00 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று முன்தினம் காலை 5.00 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜை, 108 மூலிகை ஹோமம், காலை 9.00 மணிக்கு கடம் புறப்பாடு, 10.30 மணிக்கு மூலவர், பரிவார மூர்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது.
விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.
ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

