sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போதை ஸ்டாம்ப் விவகாரம் பரபரப்பு தகவல் 'வைரல்'

போதை ஸ்டாம்ப் விவகாரம் பரபரப்பு தகவல் 'வைரல்'

போதை ஸ்டாம்ப் விவகாரம் பரபரப்பு தகவல் 'வைரல்'


ADDED : மார் 05, 2024 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2024 05:06 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ரெஸ்டோ பார்களில் போதை ஸ்டாம்ப் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், ரெஸ்டோ பார்களில் டி.ஜே. இசை நிகழ்ச்சி நடத்தும் லாஸ்பேட்டை தாகூர் நகர், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்த சிவசுப்ரமணியன் மகன் சசிதரன், 28, என்பவரை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர். இவரிடம் 7 போதை ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சசிதரன் அளித்த தகவலின்பேரில், கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லுாரி இறுதியாண்டு மாணவர் சென்னை காலடிப்பேட், ஆஷிக், 23, தண்டையார்பேட்டை பொறியியல் பட்டதாரி கோபால் மகன் சந்தோஷ், 22, ஆகியோரை கைது செய்து 13 போதை ஸ்டாம்ப் பறிமுதல் செய்தனர்.

இருவரும் சென்னையில் வசிக்கும் கேரளா திருச்சூரை சேர்ந்த ஹசின், 22, என்பவரிடம் இருந்து போதை ஸ்டாம்ப் வாங்கி வந்தது தெரிய வந்தது. ஹசினை கைது செய்த போலீசார், 100 போதை ஸ்டாம்புகளை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆஷிக், தமிழக அமைச்சர் ஒருவரின் உறவினர் என்றும், அரசியல் அழுத்தம் காரணமாக அவரது கார் விடுவிக்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us