sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 புதுச்சேரியில் தேசிய புத்தக கண்காட்சி அடுத்த மாதம் 19ம் தேதி துவங்குகிறது

/

 புதுச்சேரியில் தேசிய புத்தக கண்காட்சி அடுத்த மாதம் 19ம் தேதி துவங்குகிறது

 புதுச்சேரியில் தேசிய புத்தக கண்காட்சி அடுத்த மாதம் 19ம் தேதி துவங்குகிறது

 புதுச்சேரியில் தேசிய புத்தக கண்காட்சி அடுத்த மாதம் 19ம் தேதி துவங்குகிறது


ADDED : நவ 24, 2025 05:33 AM

Google News

ADDED : நவ 24, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் அடுத்த மாதம் 19ம் தேதி தேசிய புத்தக கண்காட்சி துவங்கி 10 நாட்கள் நடக்கிறது.

புதுச்சேரி எழுத்தாளர் புத்தகச் சங்கத்தின் சார்பில், ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 29-வது தேசிய புத்தக கண்காட்சி வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை 10 நாட்கள் நடக்க உள்ளது.

கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டில்லி முதலான பகுதிகளிலிருந்து 100 புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அரங்குகள் அமை க்கப்பட உள்ளன.

60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. இக்கண்காட்சியில் புதுச்சேரி எழுத்தாளர்களின் 15 நுால்கள் வெளியிடப்படுகின்றன. புதுச்சேரி எழுத்தாளர்களின் நுால்களுக்கு, தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

நுால்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை கண்காட்சி நடைபெறும். இவ்வாண்டு புத்தகம் வாங்கும் வாசகர்களின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப் பெற்று ஒவ்வொரு நாளும் ரூ.1,000 மதிப்பிலா ன புத்தகங்கள் பரிசாக வழங்கபெறும்.

தேசிய புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு பல ஆண்டுகளாக பங்கேற்கும் புத்தக நிறுவனங்களுக்கு புத்தக சேவா விருதுகளும், கண்காட்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைத்தவர்களுக்கு புத்தக சேவா ரத்னா விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1,000 புத்தகம் வாங்குவோருக்கு புத்தக நட்சத்திரம் சான்றிதழ், ஆயிரத்தின் மடங்கில் நட்சத்திர சான்றிதழ்களும் வழங்கப்படும். 10,000க்கும் அதிகமாக புத்தகம் வாங்குபவர்களுக்கு புத்தகச் சிறந்த நட்சத்திரம் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

கண்காட்சியையொட்டி, தினமும் பேச்சு, கவிதைப் போட்டிகள் மாலை 6: 00 மணிக்கு நடக்கிறது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 9087872555 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கண்காட்சி ஏற்பாடு குழு அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us