/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உணவியல் சிகிச்சை முறைகள் குறித்து தேசிய கருத்தரங்கு
/
உணவியல் சிகிச்சை முறைகள் குறித்து தேசிய கருத்தரங்கு
உணவியல் சிகிச்சை முறைகள் குறித்து தேசிய கருத்தரங்கு
உணவியல் சிகிச்சை முறைகள் குறித்து தேசிய கருத்தரங்கு
ADDED : பிப் 03, 2026 04:50 AM

புதுச்சேரி: புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 'உணவியல் சிகிச்சை முறைகளும், யோகாவும்- வாழ்க்கைமுறை நோய்களுக்கான ஒருங்கிணைந்த சுகாதாரம் தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
மனையியல் துறை தலைவர் அலமேலு மங்கை வரவேற்றார். கல்லுாரி இயக்குநர் கோச்சடை தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற விஞ்ஞானி பிரகாஷ் ராவ் தொடக்க உரையாற்றினார். முனைவர்கள் அழகையா, இளங்கோவன், குமரேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
ஐ.ஏ.பி.இ.என் புதுச்சேரி கிளை துணைத் தலைவர் பிரதிமா அகர்வால் சிறப்புரையாற்றினார். உதவி பேராசிரியர் ரஜினி நன்றி கூறினார்.
கோயம்புத்துார், அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் பெண்கள் உயர்கல்வி நிறுவன பேராசிரியர் உமா மகேஸ்வரி 'கர்ப்பகால நீரிழிவு நிர்வாகம் மற்றும் தடுப்பு முறைகள்' குறித்தும், சென்னை அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மூத்த மருத்துவ உணவியல் நிபுணர் ராஜேஸ்வரி 'புற்றுநோய் பராமரிப்பில் உணவியல் சிகிச்சையின் முக்கியத்துவம்' குறித்தும் விளக்கம் அளித்தனர்.
சென்னை, ஸ்ரீ சக்தி யோகாலயா நிறுவனர் உமா மகேஸ்வரி 'வாழ்க்கை முறை நோய்களுக்கான யோகா' தலைப்பில் பயிற்சியுடன் கூடிய செய்முறை' விளக்கமும், லக்னோ டாக்டர் ராம் மனோஹர் லோஹியா மருத்துவ அறிவியல் நிறுவன உணவியல் துறை தலைவர் பூனம் திவாரி 'இந்திய நோயாளிகளில் கொழுப்பு சீர்கேடுகளுக்கான உணவியல் சிகிச்சை நடைமுறைகள்' குறித்தும், சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணை பேராசிரியர் ப்ரீதா 'உடல் பருமன் தடுப்பு மற்றும் நிர்வாகத்தில் யோகா மற்றும் உணவியல் சிகிச்சையின் ஒருங்கிணைந்த நிலைத்தன்மை' குறித்தும் விளக்கினர்.

