sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாக்காளர்களை கவர மாணவர்களுக்கு 'நீட்' பயிற்சி

/

வாக்காளர்களை கவர மாணவர்களுக்கு 'நீட்' பயிற்சி

வாக்காளர்களை கவர மாணவர்களுக்கு 'நீட்' பயிற்சி

வாக்காளர்களை கவர மாணவர்களுக்கு 'நீட்' பயிற்சி


ADDED : ஏப் 27, 2025 05:31 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் புதுச்சேரி நகர பகுதியில் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். அதையொட்டி மாணவர்களை கவர்ந்தால் அவர்கள் மூலம் அவரது குடும்ப ஓட்டுகளை கவர முடியும் என, கட்சியினர் பல்வேறு உத்திகளை கையாள துவங்கி உள்ளனர்.

அதில் மாணவர்களுக்கு தேவையான நோட்டு, புத்தகம் மற்றும் தோள் பைகள், வாட்டர் பாட்டில்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்குவது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் டியூஷன் கட்டணம் கட்டுவது என, படு தீவிரமாக செய்து வருகின்றனர்.

இதில் ஒரு படி மேலே சென்று ராஜ்பவன் மற்றும் உழவர்கரை தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நீட் பயிற்சி அளிக்கும் கோச்சிங் சென்டர்களை தற்காலிகமாக ஏற்பாடு செய்து மாணவர்களை சேர்த்து நீட் பயிற்சி அளித்து வருகின்றனர்.

சராசரியாக ஒரு மாணவர் நீட் பயிற்சிக்கு சென்றால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுக்க வேண்டும். தற்போது இலவசமாக நீட் பயிற்சி கிடைப்பதால் ஏராளமான மாணவர்கள் இதில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

இது மட்டுமின்றி மாணவர்களின் பெற்றோர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு மாணவர்களின் பயிற்சிக்கு செல்கிறார்களா என, அக்கறையுடன் விசாரித்தும் வருகின்றனர் அரசியல் கட்சியினர்.

இந்த நீட் கோச்சிங் சென்டர் பயிற்சி முறையை தற்போது பல தொகுதிகளில் அரசியல் கட்சியினர் முயற்சித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us