/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பேச வாய்ப்பு அளிக்கவில்லை' நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
/
'பேச வாய்ப்பு அளிக்கவில்லை' நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
'பேச வாய்ப்பு அளிக்கவில்லை' நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
'பேச வாய்ப்பு அளிக்கவில்லை' நேரு எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
ADDED : பிப் 13, 2026 05:53 AM
புதுச்சேரி: சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட நேரு எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:
மக்கள் வரிப்பணத்தில் கூட்டப்பட்ட சட்டசபையில், எம்.எல்.ஏ.,க்கள் பேச வாய்ப்பு அளிக்கவில்லை. சபாநாயகர் மற்றும்முதல்வரின் மைக்கை மட்டுமே ஆன் செய்து வைத்துவிட்டு சபையை நடத்துவது சரியில்லை. சட்டசபை எதற்காக கூடுகிறது.
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய பேச வாய்ப்பளிக்க வேண்டும். பொதுப்பணி, கல்வி, மருத்துவ துறை ஒப்பந்த அரசு ஊழியர்களின் தொடர் போராட்டங்களால், புதுச்சேரி ஸ்தம்பித்துள்ளது. பொதுப்பணித் துறை ஊழியர்கள் மீது தடியடி நடத்தி கலவரமாக்கியுள்ளனர். எம்.எல்.ஏ., க்களை பேச விடாமல் தடுப்பது கண்டிக்கத்தக்கது.

