/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒப்பந்ததாரரை தாக்கிய நால்வருக்கு வலை
/
ஒப்பந்ததாரரை தாக்கிய நால்வருக்கு வலை
ADDED : பிப் 19, 2024 11:22 PM
புதுச்சேரி,: முன்விரோதம் காரணமாக எலட்ரிக்கல் ஒப்பந்ததாரரை தாக்கிய நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி சின்னகாலாப்பட்டு, புது நகரைச் சேர்ந்தவர் நாகேந்திரன், 31; எலட்ரிக்கல் ஒப்பந்த பணி எடுத்து செய்து வருகிறார். திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. நாகேந்திரனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சதிஷ்,30; என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் இரவு சின்னகாலாப்பட்டு இ.சி.ஆரில், அய்யனார் கோழிக்கடை அருகே நாகேந்திரன் நின்றிருந்தார். அங்கு வந்த சதிஷ், அவரது நண்பர்கள் ராகுல், 29; ரஞ்சித், 27: அய்யனார், 29; ஆகியோர் சேர்ந்து நாகேந்திரனை சரமாரியாக தாக்கி, சிறிய கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டிச் சென்றனர். படுகாயமடைந்த அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து நால்வரையும் தேடி வருகின்றனர்.

