/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவி, மாமியாரை தாக்கியவருக்கு வலை
/
மனைவி, மாமியாரை தாக்கியவருக்கு வலை
ADDED : நவ 09, 2024 05:59 AM
புதுச்சேரி : மனைவி, மாமியரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முத்தியால்பேட்டை செபஸ்தியர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சியாமளாதேவி 35, இவரது கணவர் சேகர்.
இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது.
கருத்துவேறுபாடு காரணமாக குடும்ப நீதி மன்றத்தில் விவகாரத்து வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 31ம் தேதி சேகர், மனைவி வீட்டுக்கு சென்று அங்கிருந்த மாமியரிடம தகராறில் ஈடுப்பட்டு கொண்டிருந்தார்.
இதனை தட்டிக்கேட்ட மனைவி சியாமளாதேவி, மாமியரை சரமரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் இருவரும் காயமடைந்தனர்.
இது குறித்து சியாமளாதேவி கொடுத்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.