நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பிள்ளைச்சாவடி, சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகள் பூரணி, 19. இவருக்கும் ் காலப்பட்டு அஸ்மிதன் என்பவருக்கும் கடந்த மாதம் 23ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு பொம்மையார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாமாண்டு பூரணி படித்து வந்தார்.
கடந்த 3ம் தேதி தந்தை கணசேன் வீட்டில் பூரணி தங்கி இருந்தார். அங்கிருந்து மாலை 6:00 மணியளவில் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது தாய் சீதா கொடுத்த புகாரின் பேரில் காலப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.